என்னுலக தேவதை

பிரம்மன் அனுப்பிய
எனக்கான என்னுலக
தேவதை அவள்

என் நெஞ்சுக்குள்
என் உயிரோடு
கலந்திருக்கிறாள்

நித்தம் நித்திரையில்
நிஜமாகிறாள்
வண்ணக்கனவுகளோடு

என் வாழ்வில்
பூத்த புதியதோர்
பூவுலகம்

விண்ணுக்கு ஏணியிட்டு
மண்ணைவிட்டு
தூக்கிச்செல்வென்

நட்சத்திரங்களை
காவல் நிறுத்தி
துயிலுற செய்வேன்

வானவில் வளைத்து
பஞ்சு மெத்தை
மீட்டெடுப்பேன்

என் தேவதை
கண்ணுறங்க இரவெல்லாம்
விழித்திருப்பேன்

பூமி வேண்டாம் நமக்கு
நஞ்சுக்களின்
வாசம் அதிகம் இங்கு

உன்னுயிர் காக்க
என்னுயிர் தந்து
கறை சேர்ப்பேன்

வாநிலவுக்கு
கட்டளையிட்டேன்
கருணையின்றி

என் தேவதை வருகிறாள்
உன் வாசலில்
தோரணை கட்டு

கண்டு மயங்க
உன் தோற்றத்தை
அலங்கரித்துவை

அவள் பாதம்
வலிக்காத வழிகளில்
பூக்கள் நிறைப்பிடு

பூரித்து போவாள்
உன்னையும் என்
காதலையும் கண்டு

என் காதோரம்
அவள் கிசு கிசுக்க
காத்திருக்கிறேன்

கண்களில்
கனவோடு
காத்திருக்கிறேன்

காத்திருப்பேன்
என் தேகம் கடந்து
உயிர் போகும்வரை....!

எழுதியவர் : என் தேவதைக்காக (18-Aug-14, 6:57 pm)
பார்வை : 129

மேலே