போலி வாழ்க்கை

பிறந்து வளரும்
போது அம்மா அப்பா
உரிமை வளர்ந்து
மணம் முடித்த பின்
அந்த உறவுக்கு
இல்லை முழு உரிமை..!!!

மணம் முடித்தவன்
கொடுப்பான் தாலி
மெட்டி பூ பொட்டு
இன்ப வாழ்க்கை
கால தேவன் அவனை
முன்பே அழைத்தால்
அவன் கட்டிய தாலிக்கு
இல்லை உரிமை...!!!

மங்கள நாளாம்
மணக்கோலமாம்
தேர் திருவிழாவாம்
முன் நின்று நடத்த
அழைப்புக் கொடுக்கும்
ஊரோ ஒதுக்கி
வைக்கின்றது இன்று இதிலும்
அவளுக்கு இல்லை உரிமை..!!!

பெற்ற பிள்ளையை
கஷ்டப்பட்டு வளர்த்து
மறுவீடு அனுப்பிய
பின் அன்றோடு போகின்றது
பிள்ளையின் முழு உரிமை..!!

தன் உரிமையெல்லாம்
விட்டுக் கொடுக்க
படுகின்றதா இல்லை
பறிக்கப் படுகின்றதா
என்று அறியாமலே
வாழ்ந்து முடிக்கின்ற
அவல நிலை பெண்ணின்
நிலை...!!!

எழுதியவர் : தழிழ்த்தேனீ இ.சாந்தகலா (27-Aug-14, 10:08 am)
Tanglish : poli vaazhkkai
பார்வை : 107

மேலே