நிதர்சனம்
கட்டிய சேலைக்குள்
உடல் மறைகின்றது
கோர்த்த எலும்புக்குள்
உள்ளம் மறைகின்றது
உள்ளத்தின் உள்ளே
எண்ணம் மறைகின்றது
அதை அறியாமலே
உலகம் நகர்கின்றது..!!
மண்ணைத் தோண்டி
நீர் எடுத்து ஊற்றிய
பின்னே மண்ணே
உறிஞ்சுகின்றது
அதை அறியாமலே
ஊரே உரிமை
கொண்டாடுகின்றது..!!!
இறந்த பின் உடலோ
மண்ணுக்கு இரையாகப்
போகின்றது இதை மறந்து
மண்ணில் உறங்க
மறுக்கின்றான் மனிதன்..!!
உடலுக்கு உயிர்
உரிமை இல்லை
உயிருக்கு இழுத்து
விடும் மூச்சுக் காற்று
உரிமையில்லை
இதை அறிந்தும் பல
உரிமைப்போராட்டம்
நடத்துகின்றான்
உலகில் அத்தனையும்
மாற்றமடா இதில்
நிறைந்துள்ளது
ஏமாற்றமடா...