கொத்தமல்லியுடன் ஒரு காதல்

அதிகாலை நான்கு மணி
இந்தியா சுதந்திரம் வாங்கி எட்டு நாட்கள் ஆகியிருந்தது... குழாயிடம் பெற்ற விடுதலை குறும்வாளிக்குள் களவுபோனதில்
கொதித்து தான்
குறுகிப் போனது
குளிர்ந்த நீர்...
ஈரக்காற்றிலே
S2 போனும்
காதல் பாடல்களை
காற்றுக்கு கற்றுக்கொடுக்க, எப்போதும் முணுமுணுக்கும் ஈரவாய்களும் இன்று
இதழ் மோதல் நிகழ்த்தாமல் களவு முடிந்த
கண்அயர் போல்
மௌனம் காத்தன...
நட்பின் பாரம்
'நீர் ஏறிய பஞ்சு போல்' நெஞ்சுக்குள் சுமையாக,
காதல் வரிகளுக்கு
சாயும் செவிகூட
செவிட்டுச் சாயம் தான் பூசிப்போனது...
"எனக்கும் ஓர் நண்பன் இருந்தான்"என்ற
இறந்தகால பதங்கள்
நாளைய சுயசரிதைக்கு
இன்றே இடம் கேட்கையில் மனம் மருங்கி தான் தவறுணர்கிறேன்...
நேர்முகம் முன்
நெஞ்சுரை நிகழ்த்தாமல், பார்க்கும் காட்சிகளிலே
அவன் முகம் தேடி,
செவி கேட்கும் வார்த்தையெல்லாம்
அவன் பெயராய் திரித்து, நவில்வதற்கு நல்ல
நாள் தேடும் மூடத்தனம், மற்றவனுக்கு மதி புகட்டும் மடையனுக்குத்தான் வாய்க்கிறது என்பதை உணர்கையிலே
விழிகளிலே வியர்வை வியாபிக்கத் தான் செய்கின்றன ..
..காதலும் கவலையுமே, கேண்டீன் காபிகளின் நிதிநிலையை சீர்படுத்த,
ஒரு மணிநேரம்
இதழ் தவறி விழும்
ஓரிரு வார்த்தைகளிலே
எங்கள் வாழ்கைசக்கரத்தின் அச்சாணி சுழன்றது...
முதல் நாள் வெகுளியாய்
'CEG Trailer'
பார்த்த கண்கள் இன்று மனஅரங்க திரைகளிலே
அதே Trailerக்கு
ஆஸ்கர் முன்மொழிகின்றன.. 67 துரியர் முன்,
ஆணாகிப் போன
திரௌபதியின் மானத்தை, கண்ணனுக்கு காத்திராமல், கைத்துடைத்து காத்தவனை மனம் நடுவே ஏற்கிறேன்.... மறுபிறவியில் அவன் நேசிக்கும் மங்கையாக மாறிப்போக

எழுதியவர் : (31-Aug-14, 12:11 pm)
பார்வை : 72

மேலே