மஞ்சளிலே
கற்பனை தடம் மாறும்
கனவுகள் தடுமாறும்
கலங்கிய மனசுக்குள்ளே-
கவிதைகள் அரங்கேறும்!
புல்லிதழ் தடுமாறும்
பூவிதழ் தலைசாயும்
தென்றலின் தழுவலிலே-
தேன் சுரக்கும்; பூ மலரும்!
அங்கங்கள் அலைமோதும்
ஆயிரமாய் வடிவம் பெறும்
காற்றடிக்கும் வேகத்திலே-
அலையடித்துக் கடல் ஓயும்!
செவ்வானம் ஒளியுதிர்க்கும்
மஞ்சளிலே மனம் லயிக்கும்...
மெல்ல மெல்ல நிறமிழந்து-
மேற்கினிலே நிலவுதிக்கும்!
நீல வானம் முகம் மாறும்
வெண் மேகம் நிறம் மாறும்
மின்னலோடு இடி இடிக்க-
மேகங்கள் மழை தூவும்!
03.04.2001