கிறிஸ்டல் மனோவா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கிறிஸ்டல் மனோவா
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  30-Sep-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Feb-2012
பார்த்தவர்கள்:  1539
புள்ளி:  229

என்னைப் பற்றி...

இவை கவிதைகள் அல்ல ... என் இதயத்தின் இருமல்கள்.... - Designer

என் படைப்புகள்
கிறிஸ்டல் மனோவா செய்திகள்
கிறிஸ்டல் மனோவா - கசெல்வராசு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2019 5:54 pm

............அறியாமை....
💦💧💦💦💦💦💦💦

தாகத்துக்கு தண்ணீர்
யாகத்தால் கிடைக்கும் போது
மரம் வளர்த்து மழைகேட்டே
மடையர்களாய் வாழ்ந்து விட்டோம்...
☔☔☔☔☔☔☔☔
க.செல்வராசு....

மேலும்

பகுத்தறிவு மலர நவீன விஞ்ஞான அரசியல்வாதிகள் நம்மை வழிகாட்டும் காலம் ஒன்றை உருவாக்குவோம் 26-Jun-2019 5:26 am
அருமை. வறட்சி உலகில் எங்கும் இல்லாமல் விரட்டியடிக்க யாகம் போது. நாடெங்கும் ஒவ்வொரு ஊரிலும் யாகம் நடத்தினால் நாடு செழிப்படையும். நாம் புத்திசாலிகள் ஆக அருமையான வழி. 25-Jun-2019 6:02 pm
கிறிஸ்டல் மனோவா - Dr A S KANDHAN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2019 9:34 am

வல்லிய ஊழ்வினை சூழினும் நற்றுணை
தெள்ளிய மனத்து அறிவு

வல்லிய ஊழ்வினை சூழினும் நற்றுணை
தெள்ளியம னத்த றிவு

மேலும்

இந்த படைப்பைப் பகிர்ந்த கவிப்பிரிய கிறிஸடல் மனோவா அவர்களுக்கு நன்றி 30-Jun-2019 9:09 am
கருத்திட்ட கவின் கவிக்கு நெஞ்சார்ந்த நன்றி ,,,, 28-Jun-2019 12:30 am
உண்மை 27-Jun-2019 10:22 pm
கருத்திட்டு மகிழ்ந்த கவிப்பிரிய ஆரோ விற்கு நன்றி ,,, என்னுடைய கருத்துக்களையும் , சிந்தனைகளையும் மரபுச் செய்யுள் வடிவங்களில் ஒன்றான. குறட்பா வடிவில் எழுதுகிறேன் ... இதுவும் அதில் ஒன்று ,,,, இரசித்து , மன மகிழ்ந்து பாராட்டிய தங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி ,,,,, 27-Jun-2019 12:05 am
கிறிஸ்டல் மனோவா - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2019 9:39 pm

நண்பா, நீ அதிர்ஷ்டசாலிடா.
@@@@
என்னடா சொல்லற?
@@@@@
திருணம் ஆகி ஒரே வருசத்தில உன் மனைவி அழகான பெண் குழந்தையப் பெத்துக் குடுத்தாங்களே. அதத்தான் நான் சொன்னேன்.
@@@@@
எனக்கும் முல்லைக்கும் ரொம்ப சந்தோசம்டா. எம் பொண்ணுக்கு 'யா'வில முடியற புதுமையான, யாரும் தன் குழந்தைக்கு வைக்காத இந்திப் பேரா ஒண்ணு சொல்லடா நண்பா. நானும் பெயர் ஆராய்ச்சி பெயர் விற்பனை மையத்தில விசாரிச்சேன். அந்த மாதிரி பேரு எதுவுமே இல்லைனு சொல்லிட்டாங்கடா.
@@@@@
நாம கிராமத்தில் பொறந்து வளர்ந்து படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டு உழவுத் தொழிலைச் செய்யறோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்கூட பாக்க நமக்கு நேரமில்லை. நாம அதை விரும்பறதும்

மேலும்

தமிழர்களின் இந்திப் பெயர் வெறியைச் சுட்டிக்காட்டவே இதைப் போன்ற படைப்பு. நன்றி கவிஞரே. 29-Jun-2019 2:02 pm
Super name!!!!!! அமானுஷ்யா.... மனித இனம் அல்லாதது... கடவுள் எனப் பொருள் கொள்ளலாமே! யாரும் 'சாமி' எனப் பெயர் வைத்துக் கொள்வதில்லையா என்ன? 29-Jun-2019 11:59 am
கிறிஸ்டல் மனோவா - கைப்புள்ள அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2019 12:45 pm

பகுந்து உண்ணும் காக்கை காக்கைக்
கடிகடித் துண்பர் காதலர்.

மேலும்

பகுந்து 01-Jul-2019 10:30 pm
நன்று ! பகுந்து? அல்லது பகிர்ந்து? 29-Jun-2019 11:54 am
கிறிஸ்டல் மனோவா - கிறிஸ்டல் மனோவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2014 11:55 am

சு ற்றிச் சுற்றித் தேடுகிறேன்
ம னசெங்கும் நீதான்...
தி ரும்பவே முடியவில்லை!

சு மையான சுகமாக
ம னசெல்லாம் வலிக்கிறது...
தி னமும் உன் நினைவுகள்!

சு ருதி சேரா ராகங்கள் - என்
ம னதிலுள்ள கானங்கள்...
தி ரும்பிப் பார்! சுருதி சேரும்!

சு ற்றிச் சுற்றித் தேடுகிறாய்
ம னசுக்குள் எட்டிப் பார்...
தி ரவமாய் உருகி உருகி

உனக்குள்ளே நான்!

**
சு ந்தரத் தமிழினில்
ம துரமாய் எழுதிடுவேன்...
தி த்திக்கும் என் வார்த்தைகள்!

மேலும்

கிறிஸ்டல் மனோவா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2019 9:41 am

வருகிறாய், போகிறாய்...
வசந்தம் போல்!

இடையிடையே வீசுகிறாய்...
இளந்தென்றலாய்!

வசந்தகால நினைவுகள்-
குருவிக்கூடுகளாய் -
காற்றினால் அடிக்கப்பட்டும்,
கரையான்களால் அரிக்கப்பட்டும்!

இலைகளை இழந்தும்,
கிளைகளில் காயமேற்றும் -

வேர்களைப் பரப்பி
ஒற்றை மரமாய்க்
காத்திருக்கிறேன்...

இன்னொரு வசந்தத்திற்காய்!

வருகிறாய், போகிறாய்...
வசந்தம் போல்!

05.03.2019

மேலும்

கிறிஸ்டல் மனோவா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2018 11:04 am

இன்றொரு பாடலை எழுதுகின்றேன்...

இது உனக்காக அல்ல,
எனக்கான பாடலும் அல்ல,
நமக்காகவும் எழுதவில்லை,
அறிமுகமில்லாத
அன்னியனுக்காகவும் இல்லை.

முகவரி தெரியாமல்
எழுதப்படும் பாடல் இது...
முதல் வரி இல்லாமல்
எழுதப்படும் பாடலும் இதுதான்!

இந்தப் பாடலிலே
பல்லவி இருக்காது-
சரணங்களும் இல்லை!

இந்தப்பாடலை இசைக்க
ராகங்கள் தேவையில்லை!

இந்தப்பாடலை
ராக தேவனாலும்
பாட முடியாது!

எத்தனையோ காற்றுக்கள்
இந்தப்பாடலைத் தடவிப் பார்த்தும்-
இதன் உருவத்தினை
உணர முடியவில்லை!

எத்தனையோ கண்கள்
இதை வாசித்தும்
இதைப் புரிந்து கொள்ளவில்லை!

இது-
சிந்தனைகளை ஒருங்கிணைத்து
எழுதப்பட்ட பாடல்

மேலும்

கிறிஸ்டல் மனோவா - கிறிஸ்டல் மனோவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2014 5:16 pm

முன் தோன்றி
முழுதறிந்த
மூடனே!

முன் வினை ஈடேற
என் வினை நீ செய்தாய்...

இவ்வினைப் பலனனைத்தும்
எவ்விதம் ஈடு செய்வாய்?

இன்னொரு வேடம் தருவாயா?
கண்களை மூடிக் கொள்வாயா?

வேற்றிடந் தந்தாய்...
வித்தைகள் செய்தாய்!

சோதனை செய்தாய்...
சொத்தெல்லாம் கொய்தாய்!

வெற்றிடமும் கிடைக்கவில்லை
கற்றதுவும் ஊறவில்லை...

நீ நடத்தும் தெருக்கூத்தில்
நான் நடித்தேன்
நாள் முழுதும்...

பாராட்டும் பழிச்சொல்லும்
என்னைச் சேர்ந்தன!

வினைப் பயன் என்றாய்!

விதி செய்தோன் நீதானே!

முன் தோன்றி
முழுதுஞ் செய்த
மூடனே!

என் வினை ஈடேற
இங்ஙனம் நீ செய்தாய்...

உன் வினை விளைவனைத்தும்
எவ்

மேலும்

நன்றி நண்பரே 08-Feb-2014 6:31 pm
அசத்தல் வரிகள் ..! 08-Feb-2014 6:12 pm
கிறிஸ்டல் மனோவா - கவிஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2017 9:14 pm

வால்பாறை என்றொரு சிலி - கட்டுரை- கவிஜி
****************************************************************

மனித கால் தடங்களே படாத இடங்களில் இருளின் வாசம் இன்னும் பிறக்காத குழந்தையின் சுவாசத்தைக் கொண்டிருக்கிறது. எனக்கு தெரிந்து ஒரு முறை கடவுள் வந்து விட்டு போனதாக கூட ஞாபகம்..

அருவி கொட்டும்
அடிவானம் முட்டும்
ஆழங்கள் கிட்டும்
பெருமழை தட்டும்.....

இந்தியாவில் இரண்டே இடங்களில் இருக்கும் சிங்கவால் குரங்குகள் இருக்கும் இரண்டாவது இடம் அல்லது முதல் இடம். அந்தம் கொண்ட ஆதியில் ஆதி கொண்ட அந்தமும் இருப்பது போல.

40 கொண்டை ஊசி வளைவுகள்.....50 க்கும் மேற்பட்ட சிறு வளைவுகள் தாண்டி மெல்ல ஊர

மேலும்

வால்பாறை - நான் பிறந்து வளர்ந்த மண். நினைத்தாலே சிலிர்க்கிறது. சில்லெனச் சுடுகிறது. இந்த கட்டுரையைப் படிக்கும்போது சில நிமிடங்கள் வால்பாறையில் பறந்தேன். நன்றி கவிஜி. வாழ்த்துக்கள்! வளருங்கள்! 26-May-2017 10:44 am
கிறிஸ்டல் மனோவா - Arun Mani அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-May-2017 6:27 pm

ஒரு பெண் ஒழுக்கமற்ற உடை அணிவது சரியா? தவறா?

மேலும்

* முதலில் ஒழுக்கமான / ஒழுக்கமற்ற என்ற வரையறையை செய்வது யார்? * அது பெண்ணுக்கு மட்டும்தான் பொருந்துமா? * அடுத்தவரின் நடை உடை பாவனைகளை கட்டுப்படுத்த நீ யார்? நான் யார்? * தமிழனான நீ தோற்றத்தை வைத்து ஒருவரை எடை போடலாமா? 17-May-2017 7:29 pm
முதலில் இந்த சமுதாயம் ஒரு மனிதனின் தோற்றத்தை வைத்து தான் அவன் நல்லவனா இல்லை கெட்டவனா என்று சொல்லும் பிறகு தான் அவன் குணத்தை ஆராயும் ஒருவரது தோற்றம் தான் அவன் மதிப்பை கூட்டும். ஏன் நீங்கலே ஒருவரது தோற்றத்தை பார்த்து தான் பழகுவீர்கள் பின்பு தான் அவர் குணங்களை பார்ப்பீர்கள்......... 17-May-2017 8:31 am
சரி, தவறு என்ற இரண்டிற்குள் அடங்கிவிடாது இந்த விடயம். ஒழுக்கமான ஆடை, ஒழுக்கமற்ற ஆடை? அப்படி ஏதாவது இருக்கின்றதா. அப்படி பார்த்தால் ஆண்களுக்கும் இது பொருந்தும். பெண்கள் முன்பு மேல் அங்கி இல்லாமல் இருப்பது, தொடைதெரியும் படி வேஷ்டி அணிவது, இதுவும் ஒழிங்கீனம் தானே? ஆணின் ஒழுக்கமற்ற பார்வை, ஒழுக்கமற்ற சிந்தனை என்று சொல்லலாமா??? 16-May-2017 10:48 am
சரி, தவறு என்ற இரண்டிற்கும் அடங்கிவிடாது இந்த விடயம். ஒழுக்கமான ஆடை, ஒழுக்கமற்ற ஆடை? அப்படி ஏதாவது இருக்கின்றதா. அப்படி பார்த்தால் ஆண்களுக்கும் இது பொருந்தும். பெண்கள் முன்பு மேல் அங்கி இல்லாமல் இருப்பது, தொடைதெரியும் படி வேஷ்டி அணிவது, இதுவும் ஒழிங்கீனம் தானே? ஆணின் ஒழுக்கமற்ற பார்வை, ஒழுக்கமற்ற சிந்தனை என்று சொல்லலாமா??? 16-May-2017 10:47 am
கிறிஸ்டல் மனோவா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2014 11:07 am

ப்ரியமுள்ள என்னவளே!...

புயல்களின் சீற்றத்தால்
புண்ணாகிக் கிடந்த என் நெஞ்சை
புன்னகைச் சிதறல்களால்
பூக்கச் செய்தவளே!...

கண்களின் கதிர்வீச்சால்
மீண்டும் என்னைக் காயப்படுத்தாதே !

நிஜங்களை அல்ல-
நிழல்களையே உன்னிடம் யாசிக்கிறேன்...

உன்னைப் பற்றிய கனவுகளிலேயே
உன்னோடு வாழ்ந்து விடுவேன்.
உன் ஈர விழிகளின் புன்னகைகளால்
என் தாகங்களை தீர்த்துக் கொள்வேன்...

உனக்குள் நான் ஒளிந்திருப்பதும்
எனக்குள் நீ நிறைந்திருப்பதும்
சுகமான அனுபவங்கள்!

மேலும்

அருமை .... 10-Oct-2014 4:37 pm
அழகு, அழகு !! வாழ்த்துக்கள் !! 10-Oct-2014 11:34 am
கிறிஸ்டல் மனோவா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2014 6:23 pm

ராத்திரிக் கனவுகள்...
தினமும் உன் நினைவுகள்...
தேகங்கள் சிலிர்த்திடும்!
விழியிரண்டும் கனத்திடும்!

ரவிவர்மன் ஓவியமா?
திகட்டாத காவியமா?
தேன் துளிகள் தொட்ட பின்னும்
விரல்கள் கசக்கிறது!

ரவிக்கை என்ன நிறம்
திறந்தால் என்ன வரும்
தேடிடும் மனம் அது...
விழியில் கனவு வரும்!

மேலும்

நன்றி நண்பரே! 10-Oct-2014 10:54 am
ஒரு வரியை தவிர மற்ற வரிகள் நன்று ..... 04-Oct-2014 12:44 pm
என்ன ஆச்சு? 04-Oct-2014 12:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (61)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
கவிஜி

கவிஜி

COIMBATORE

இவர் பின்தொடர்பவர்கள் (61)

Nishan Sundararajah

Nishan Sundararajah

கத்தார்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
myimamdeen

myimamdeen

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (61)

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே