நீ வருவாய் என
வருகிறாய், போகிறாய்...
வசந்தம் போல்!
இடையிடையே வீசுகிறாய்...
இளந்தென்றலாய்!
வசந்தகால நினைவுகள்-
குருவிக்கூடுகளாய் -
காற்றினால் அடிக்கப்பட்டும்,
கரையான்களால் அரிக்கப்பட்டும்!
இலைகளை இழந்தும்,
கிளைகளில் காயமேற்றும் -
வேர்களைப் பரப்பி
ஒற்றை மரமாய்க்
காத்திருக்கிறேன்...
இன்னொரு வசந்தத்திற்காய்!
வருகிறாய், போகிறாய்...
வசந்தம் போல்!
05.03.2019