இவனுக்குப் பின்னும் இவன் தலைமுறைக்குப் பின்னும்

பிண்டங்களில்
செய்த உருவம்
அண்டங்களை ஆள
ராச்சிய தானாதிபதி
முரசறைந்து சொன்னார்
....நாளைமுதல்
மாதம்
மும்மாரி பொழியும்
..நாடெங்கும்
சொர்ணம் விளையும் ...
பக்கத்து குட்டையில்
பத்து பனிரெண்டு தவளைகள்
பராக் பராக்
என்று கத்தின.
வழக்கம் போல-
சூரியன்
மேற்கில் உதிக்காமல்
கிழக்கிலேயே உதித்தான்.

எழுதியவர் : சுசீந்திரன். (21-Sep-14, 10:06 am)
பார்வை : 84

மேலே