ஹைக்கூ எழுதலாம் வாங்க – 22

நடுங்கிக் கொண்டு
ரசிக்கிறான்.
பனித்துளிகளை

முதலிரண்டு அடிகளில் எதையோ, எங்கோ, தனிமையில் திருட்டுத்தனமாக ரசிக்கிறான். அதனால் அவன் நடுங்கிக் கொண்டு இருக்கிறான் என்று பொருள் விரிகிறது. மூன்றாம் அடியில் பனித்துளியை ரசிக்கிறான் என்றிருப்பதால் நாம் அவனை ரசிக்க வேண்டியதாகிவிடுகிறது. நடுங்கும் குளிரில் அவனுக்கு அப்படி ஏன் பனித்துளிகளை வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதோ? அதற்காக வருந்துவதா? நாம் ரசிக்க மறந்ததை அவன் ரசிப்பதற்காக நாம் ஹைக்கூவை ரசிப்பதா?

நடுங்கிக் கொண்டு
ரசிக்கிறான்.
பனித்துளிகளை
- கவியருவி ம.ரமேஷ்

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (24-Sep-14, 6:53 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 70

மேலே