விழிகள் காதல் பேசியதே

பார்க்காத பார்வையெல்லாம்
பார்த்தவள கண்ணுக்குள்ள
வச்சு காக்க எனக்கு ஆசை தான்

தீ போல கண்ணிரண்டு தேனான பார்வையால
கண்ணா கட்டி கட்டில் விட்டுட்டா
இதயம் இங்கு என்னோடு இருக்கவில்லையே
பார்வைகளை என் இதயம் மறக்கவில்லையே
உடலை எறித்து போன பிறகும்
நினைவு அழிவதில்லையே

( பார்க்காத பார்வையெல்லாம் .....)

நித்தம் உன்னை எண்ணி நானும்
வாழ்க்கையினை கழிக்கின்றேன்
பார்வையிலே வார்த்தை படித்து
கவிஞனாக மாறுகிறேன்
இதயம் எனும் கூட்டுக்குள்ளே
உன்னை அடைத்து வைக்கின்றேன்
கவிதை எனும் பூக்கள் கொண்டு
அர்ச்சனைகள் செய்கின்றேன்
நீயும் என்னை மறந்து போக
உயிரும் உடலை மறந்திடுமே

( பார்க்காத பார்வையெல்லாம் .....)

கருவிழியில் நீயிருக்க தீயவைகள் பற்றாதே
கருணை கொண்டு நீயும் கொஞ்சம்
என்னை ஏற்றுக் கொள்வாயே
விழிகள் பார்க்கும் நேரத்தில் பரவசமாய் ஆகின்றேன்
புன்னகையில் என்னை நானே
இழந்து போக துடிக்கின்றேன்
பேசுகின்ற இரு விழிகள், புன்னகைக்கும் ஒரு அழகு
காதல் கொண்டு என்னை காணும் அழகு அழகு மிகவும் அழகு ....

( பார்க்காத பார்வையெல்லாம் .....)

எழுதியவர் : சிவா அலங்காரம் (7-Oct-14, 3:04 pm)
சேர்த்தது : சிவா அலங்காரம்
பார்வை : 69

மேலே