தனிமை
தனிமை தவழ
தனித்திருந்து சிந்திக்கிறேன்...
தனிமையை...
தவிப்பது நான்
உள் துடிப்பது
நீயாக இருப்பதால்...
இடிகளின் இன்னலில்
கிழியும் மேகமாய்
கிழிந்தது உள்ளம்....
பிறக்கின்ற
குழந்தை அழுக்குரலாய்
ஒரமாய் உள்
அழும் மனம்.......
-மூ.முத்துச்செல்வி