அவசரம்

இன்றைய மனிதன் இயங்குகிறான் அவசரமாக...
அதனால்தான் வாழ்கிறான் அரைசவமாக...

வேகமாக செல்கிறான்... வேகத்தடையின் மீதும்...
'தன் வேகம் தான், தனக்கு தடை" என்பதை மறந்து...

நிதானம் இழந்து, சாலையில் ரத்த தானம் செய்கிறான்...
தினமும் எங்காவது விழுந்து, யுத்த கோலம் காண்கிறான்...

மனிதா..,
இலக்கை எட்டும் வரை, பொறுமை எனும் விளக்கை கையில் எடுத்து செல்...
நீ எட்டிய பிறகு, அறிவில் எட்டதவர்க்கும், விளக்கமாக இதை எடுத்து சொல்...

எழுதியவர் : சாய நதி (8-Oct-14, 11:38 pm)
சேர்த்தது : சாய நதி
Tanglish : AVASARAM
பார்வை : 68

மேலே