என்ன விடை
காற்றுக்கு அசையும்
ஒற்றை மரக் கிளையில்
ஒரு பறவை!!
ஓரப் பார்வையால்
உலகை நோக்கிய படி...
வலிகளுடன் சிலர்!
வாழ்க்கைக்காக சிலர்!
புதுமையுடன் சிலர்
புகழ்ச்சிக்காக சிலர்!
எண்ணங்களுடன் சிலர்!
ஏமாற்றங்களுடன் சிலர்!
காதலுடன் சிலர்!
கல்லறையில் சிலர்!
அன்புக்காக சிலர்!
அடுத்தவனுக்காக சிலர்!
மாற்றங்களுடன் சிலர்!
மனதுடன் சிலர்!
உதடு இல்லாத பறவை
உலகத்திடம் கேட்கிறது!
இவர்களில் மனிதன் என்பவன் யார்?
விடையின்றி விடிகிறது
நம் நாட்கள் !