பவிதா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பவிதா
இடம்:  யாழ்ப்பாணம்
பிறந்த தேதி :  14-Dec-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Oct-2014
பார்த்தவர்கள்:  725
புள்ளி:  73

என்னைப் பற்றி...

கணக்காய்வுத் துறையில் பணிபுரியும் மிகச் சாதாரணமான பெண். புத்தகங்கள் மீதும் நல்ல எழுத்துக்கள் மீதும் அதை ரசிப்பவர்கள் மீதும் எப்போதும் எனக்கொரு காதல் உண்டு. கொஞ்சம் எழுதுவேன். நிறைய வாசிப்பேன். திகட்ட திகட்ட ரசிப்பேன். என்னுடைய உலகத்தில் மனிதர்கள் மீதான நம்பிக்கை கொஞ்சம் குறைவானது. அனால் வாழ்க்கை மீதும் அது கொடுக்கிற பாடங்கள் மீதும் என்றுமே அசராத நம்பிக்கையுண்டு. எழுத்துக்கள் உங்களுக்குத் பிடிக்குமென்றால் எனக்கும் உங்களை பிடிக்கும்.

என் படைப்புகள்
பவிதா செய்திகள்
பவிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2018 8:05 pm

இதயத்தை உடைத்தெறியும்
இத்தனை வலிகளும்
இயல்பாகிப் போன ஏக்கங்களும்
சுட்டெரிக்கும் சூழ்நிலையும்
சுவாசமெல்லாம் அழுத்தங்களும்
பொழுதெல்லாம் சூழ்ந்த பொய்களும்
போலிகளுக்குள்ளே உழல்வதும்
தவிக்கவிட்ட தனிமைகளும்
தன்னலமான அன்பும்
விரட்ட விரட்ட தொடர்வது தான்
நீங்கள் கொண்டாடும் காதலென்றால்
கடைசி வரை காதலும்
கன்னியிவளுக்கு தெரியாமலேயே இருக்கட்டும்..!!

மேலும்

ஆணின் உள்ளத்திலும் பெண்ணின் உள்ளத்திலும் வெளியில் சொல்லப்படாத காதல் கதைகள் பல மரணம் வரை நினைவுகளில் கொஞ்சம் கண்ணீரை சிந்திப்போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2018 1:11 pm
பவிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2017 9:58 pm

தூரத்தில் முனகும் பாடலின் வலியாய்........
கரை தீண்டக் காத்திருக்கும் அலையொன்றின் ஏக்கமாய்..............
கனவுகளில் கடந்துபோகும் காணலாய்...........
தனித்துப்போன நிலவொன்றின் தேடலாய்............
தவமிருந்து கண்டுகொண்ட வரமொன்றின் வர்ணனையாய்..........
விரைந்துபோன தென்றலின் ஸ்பரிசமாய்..........
விட்டு விட்டு வந்துபோகும் ஞாபக சாரலாய்..............
உரசிச்செல்லும் மேகங்களின் மென்மையாய்..........
உணர்வுகளில் உருவகிக்கும் முதல் உறவுகளாய்.........
வந்து தெறிக்கும் முதல் மழையின் சிலிர்ப்பாய்..........
எட்டிப்பார்த்த குழந்தையொன்றின் முதல் சிரிப்பாய்............
எழுதிவைத்த வரிகளுக்குள்ளே ஒளிந்துக

மேலும்

அழகு தோழி 11-Jan-2017 4:06 pm
துளசி அளித்த படைப்பில் (public) s sangeetha மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-May-2015 5:56 pm

புது தேடலை தூண்டும்
* காதல் ஸ்பரிசம்
நினைவுகளையே நீங்காத
* உஷ்ணத்தை உயிரோடு
தந்த பின்னும் ஒரு தவிப்பு
*உன் மன சிறையில்
என் மன அறையில்
*மாட்டிய போது ................................................
**********************************************

மேலும்

அருமையான வரிகள் 20-Jun-2015 7:32 pm
படம் பேசும் வார்த்தைகளும் உங்கள் வரிகளுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது தோழமையே வாழ்த்துக்கள் தொடருங்கள். 01-Jun-2015 3:21 pm
நன்றி 01-Jun-2015 2:46 pm
படமும் படைப்பும் கவர்ந்தது... அருமை.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Jun-2015 12:06 am
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jun-2015 10:03 am

என்னுடைய
நாட்காட்டியில்
எனக்குப் பிடித்த
நடிகனை
இடப்பெயர்ச்சி செய்தது
உன்னுடைய
இஷ்ட தெய்வம்

====================

உன்னைப்பற்றிய
நம்மைப்பற்றிய
குறிப்புகளிருக்கும்
என் வீட்டு
நாட்காட்டியும்
எனக்கு
அந்தரங்க டைரி
போலத்தான்

============================

நாட்காட்டியில்
எனது ராசிக்கு
இலாபம் என்று
போட்டிருக்கும் போதெல்லாம்
நீ
துப்பட்டாவை
மறந்துவிட்டு வருகிறாய்

============================

நாட்காட்டியின்
ஒவ்வொரு தாளையும்
எடுத்து எடுத்து
உனது பிறந்தநாள்
வரும்வரை
பார்த்துக் கொண்டிருப்பது
எனக்கான
காதல் பொழுதுபோக்கு

==================

மேலும்

அனைத்து வரிகளும் மயங்க வைக்கின்றன ................... உம் ராசிபலன் எனக்கு பிடிக்கவில்லை தோழா ........ 20-Jun-2015 7:51 pm
நன்றிகள் நாகலட்சுமி மேடம் ......தங்கள் கருத்து எனும் மாணிக்கத்திற்கு 16-Jun-2015 10:53 am
உன் பிறந்த நாளோடு நாட்காட்டிக்கு v r s கொடுத்து விடுகிறேன்...அழகு.!!! 16-Jun-2015 10:33 am
மேற்போருந்திய = மேற்பொருந்திய 08-Jun-2015 5:40 pm
விஷ்ணு பிரதீப் அளித்த படைப்பில் (public) கவியரசன் புது விதி செய்வோம் மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Jan-2015 9:18 pm

அவளும் அவனும்....

ஒரு ஆற்றங்கரையில் ஈரச்சுவடுகளை பதித்துக்
கொண்டு ஓர் பெண் நடந்து செல்கிறாள் இல்லை
இல்லை மிதந்து செல்கிறாள் ..

தாயின் வாசத்தைத் தொடர்ந்து செல்லும் குழந்தை
போல அக்கரையோர கண்ணகியின் வாசத்தைப்
பெற அச்சுவடுகளை பின்பற்றுகிறான் ஒரு இளைஞன் ..!

ஊரடங்கு சட்டம் போட்டதொரு தனிமையில்
சுட்டெரிக்கும் கதிரவனையும் மொட்டைப்
பாறைகளையும் துணையைக் கொண்டு ..

அப்பெண்ணின் மகரந்தக் கூந்தலின் மனத்தைக்
காற்றில் தேடலயினான் ....

ஆண்களுக்கே உரிய மனவலிமை மறந்து போய்
கானகத்தை காகித மாக்கும் தன் வீரம் குன்றிவிட அவன்
தன்னிலை மறந்த ஓர் அகதியை பிறந்த ஊரில் அலைகிறான்

மேலும்

மிக்க நன்றி தோழி..! 03-Jun-2015 9:15 pm
அருமை தோழமையே. உவைமையில் அழகும் வரிகளில் உணர்வின் அழுத்தமும் என மிளிர்கிறது உங்கள் படைப்பு, வாழ்த்துக்கள். 01-Jun-2015 3:16 pm
உங்கள் கருத்திற்கு என் பணிவான நன்றிகள் தோழரே..! 05-Jan-2015 6:14 pm
உங்கள் கருத்திற்கு என் பணிவான நன்றிகள் தோழரே..! 05-Jan-2015 6:14 pm
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 13 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
பவிதா - விஷ்ணு பிரதீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Dec-2014 11:30 am

கடலில் காதலனைத் தொலைத்து விட்ட ஓர்
காதலியின் குரல் ..

ஓ..கடலன்னையே காதலைத் தொலைத்து
விட்ட காதலியின் கதறல்
கேட்கிறதா ...உனக்கு ?

அலைகளின் ஓசையில் இந்த,
அபலைப் பெண்ணின் ஓலத்தையும்
சேர்த்துக் கொள் ..!

காதலின் நதியில் என்னை ,
ஓடமாய் சுமந்து தங்கிச் சென்ற ...என்
தலைவன் ...இன்று

உன்னில் மிதந்து கொண்டிருக்க
நானோ அவன் விட்டுச் சென்ற
நினைவுகளில் நனைந்து கொண்டிருக்கிறேன் ..!

என்னவனை என்னிடம் தந்து
விடு தாயே...

சிப்பிக்குள் இருந்து முத்தெடுக்க அவன்
செல்லவில்லை,இந்த முத்திற்காக
சிப்பி எடுக்க சென்றிருக்கிறான் ..!!

கரையோரம் ஈர

மேலும்

பவிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2014 11:09 am

உலகம் கண்டதும்
உணர்வுகளைப் பெற்றதும்
உடலாக உருவகித்ததும்
உறவுகளைக் கொண்டதும்
பிறவி என்ற மூன்றெழுத்தில்....!!

தாலாட்டில் மயங்கியதும்
தாய்ப்பாலில் கரைந்ததும்
உள்ளங்கையில் முகம் புதைத்து
உணர்வுக் கூட்டில் உறைந்ததும்
அம்மா என்ற மூன்றெழுத்தில் .....!!

குழந்தையாக சிரித்ததும்
குறும்புகள் செய்ததும்
நட்பெனும் உலகமதில்
நான் இறங்கிப் பார்த்ததும்
பள்ளி என்ற மூன்றெழுத்தில்....!!

பருவங்கள் மாறியதும்
தாவணியில் மலர்ந்ததும்
நாணமாக உணர்ந்ததும்
நான் நானாக பிறந்ததும்
பெண்மை என்ற மூன்றெழுத்தில்...!!

சிறகடித்து பறந்ததும்
சிட்டாக திரிந்ததும்
கனவுகள் பல கொண்டதும்
கதை பேசி ரசித்தத

மேலும்

நன்றி 25-Dec-2014 11:05 am
நன்றி 25-Dec-2014 11:05 am
அதுவும் சரி தான். நன்றி தோழமையே 25-Dec-2014 11:05 am
நன்றி தோழமையே 25-Dec-2014 11:05 am
பவிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2014 9:32 am

காமன் அரசவையில்
கவி பாடும் வண்டினங்கள்
பேதை இவள்.....
ஓரப் பார்வை கண்டு
போதையில் திண்டாட.....!!

உருகி உறைந்த மனம்
நடுக்கத்தில் துடிப்பது போல்
இடையிடையே இமையிரண்டும்
நெருக்கத்தில் துடித்திட...!!

தீட்டிய கண்மையில்
இருண்ட உலகம்...
சிமிட்டுகின்ற விழித்துடிப்பில்
மின்மினியாய் மின்னிட....!!

ஒற்றையடி பாதையிலே
ஒய்யாரமாய் வளர்ந்த
மூங்கில் இரண்டு
உணர்ச்சி கொண்டு
உரசுகையில்...
தெறிக்கிற தீப்பொறியை
அணைக்கின்ற சுனை போல...
நெற்றியில் இமையிரண்டின்
இடை நடுவே பொட்டு...!!

காதோரம் புனைந்த
வளையம் அது
காற்றில் இசைபாட
செறிந்து விழும் குழலும்
அது கொண்ட மணமும்
மனம் மயக

மேலும்

நன்றி 08-Dec-2014 10:00 am
நன்றி 08-Dec-2014 9:59 am
அருமை,,,,அருமை,,,,, 08-Dec-2014 9:17 am
மிக அருமை பவி... 03-Dec-2014 4:14 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
21-Nov-2014 7:15 am

இரவுகள் இல்லையென்றால்
புது விடியல் தேவை இல்லை

பிரிவுகள் இல்லையென்றால்
உறவிற்கு மதிப்பில்லை

காதல் இல்லையென்றால்
கவிதைகள் பிறப்பதில்லை

விழிகள் இல்லையென்றால்
கனவிற்கு வேலையில்லை

வலிகள் இல்லையென்றால்
வாழ்க்கை சுவைப்பதில்லை

வாலிபம் இல்லை என்றால்
வாழ்வதில் அர்த்தம் இல்லை

சாதிகள் இல்லையென்றால்
மனிதர்க்குள் பிரிவு இல்லை

மதங்கள் இல்லையென்றால்
மனிதநேயம் மரணிப்பதில்லை ...!!

மேலும்

அருமை! 08-Dec-2014 9:47 am
அருமை...அருமை... 08-Dec-2014 9:18 am
நன்றிகள் தோழா 24-Nov-2014 6:47 am
காதல் இல்லையென்றால் கவிதைகள் பிறப்பதில்லை.... அருமை நட்பே 23-Nov-2014 8:05 am
பவிதா - ஜின்னா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Oct-2014 1:05 am

தளத் தோழமைகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்...

நமது தளத் தோழமை (கிருபா கணேஷ்) அவர்களின் சித்தி பையன் முப்பது வயதான "ஆனந்த்" என்பவர் பெங்களூரில் தீபாவளி முதல் இரவு திடிரென்று ஒரு சுரத்தில் இறந்து விட்டார்.
இளம் வயதில் துயர் சம்பவம் அவர்களின் குடும்பத்திற்கு....

ஆகவே தளத் தோழமைகள் நாம் அனைவரும் அண்ணாரின் ஆத்மா அந்த இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டிக் கொள்வோம்...

மேலும்

வேண்டுதலுக்கு மிக்க நன்றி தோழரே... 01-Nov-2014 4:35 pm
வேண்டுதலுக்கு மிக்க நன்றி தோழரே... 01-Nov-2014 4:34 pm
எனது அஞ்சலிகள்! 01-Nov-2014 3:28 pm
மரணத்தைப் போல் மாயங்கள் இல்லை. மாயங்கள் செய்யும் மரணமே தொல்லை. 29-Oct-2014 2:05 pm
ஜின்னா அளித்த படைப்பை (public) நிலாகண்ணன் மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
26-Oct-2014 3:02 am

[என்னைப் பெற்றெடுத்த தாய்க்கு இந்த கவிதை சமர்ப்பணம்......]

பத்து மாதங்கள்
------- பரிதவித்த காலங்கள்
பெத்து எடுக்க நீ
------- பிரசவித்த நேரங்கள்

அம்மா உன்முன்னே
------- அனைத்தும் தோற்குமம்மா
சும்மா சொன்னாலும்
------- சொர்க்கமும் ஏற்குமம்மா

வச்சா கைமணக்கும்
------- வறுத்தா நெய்மணக்கும்
பச்சப் பாலகனைப்
------- பார்த்தால் பால் சுரக்கும்

சிசுவைப் பாலூட்டி
------- சிறப்பாய் வளர்த்ததிலே
பசுவை தோற்கடித்து
------- புரட்சி செய்தாயே..

வாரி அணைச்சுக்கிட்டு
------- வழிநெடுக்க நீ பாடும்
ஆரீரோ தாலாட்டு
------- ஆஸ்காரை மிஞ்சுமம்மா

விவரம் தெரியாத
------- வயதில் நான் ச

மேலும்

மிக்க நன்றி நண்பா.... 26-Jan-2016 9:04 pm
ஹா ஹா... அம்மா என்றாலே அமுதுதானே கவிஞரே... இதுவும் ஒரு கஜல் மாதிரியான கவிதை தான்.... வரவிற்கும் கருத்துக்கும் நன்றிகள் பல கவிஞரே... 26-Jan-2016 9:03 pm
சும்மா உங்கள் பக்கம் உலாவினேன் அம்மா கிடைத்தால் அமுதாக .. 24-Jan-2016 9:54 pm
உயிரென்று வந்த ஜிவன் அனைத்திற்கும்.. ஒரே சொல் என் தமிழில் அம்மா.அருமையான படைப்பு. கண்களை வருடும் கவி.வாழ்த்துக்கள்.! 17-Jul-2015 11:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (69)

முஹம்மட் சனூஸ்

முஹம்மட் சனூஸ்

மட்டக்களப்பு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]

இவர் பின்தொடர்பவர்கள் (69)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (69)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சக்தி ராகவா

சக்தி ராகவா

சென்னை
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே