மூன்றெழுத்தில்

உலகம் கண்டதும்
உணர்வுகளைப் பெற்றதும்
உடலாக உருவகித்ததும்
உறவுகளைக் கொண்டதும்
பிறவி என்ற மூன்றெழுத்தில்....!!

தாலாட்டில் மயங்கியதும்
தாய்ப்பாலில் கரைந்ததும்
உள்ளங்கையில் முகம் புதைத்து
உணர்வுக் கூட்டில் உறைந்ததும்
அம்மா என்ற மூன்றெழுத்தில் .....!!

குழந்தையாக சிரித்ததும்
குறும்புகள் செய்ததும்
நட்பெனும் உலகமதில்
நான் இறங்கிப் பார்த்ததும்
பள்ளி என்ற மூன்றெழுத்தில்....!!

பருவங்கள் மாறியதும்
தாவணியில் மலர்ந்ததும்
நாணமாக உணர்ந்ததும்
நான் நானாக பிறந்ததும்
பெண்மை என்ற மூன்றெழுத்தில்...!!

சிறகடித்து பறந்ததும்
சிட்டாக திரிந்ததும்
கனவுகள் பல கொண்டதும்
கதை பேசி ரசித்ததும்
இளமை என்ற மூன்றெழுத்தில்...!!


எதிர்ப்பாலில் மயங்கியதும்
இதயம் தொலைத்து ஏங்கியதும்
காற்றாக மனம் பரந்ததும்
கனவில் தாஜ்மஹால் கட்டியதும்
காதல் என்ற மூன்றெழுத்தில்....!!!

காலம் தொலைத்து கலங்கியதும்
கானலாகி தொலைந்ததும்
இருள் சூழ்ந்த நேரங்களில்
விடிவெள்ளி தேடி விரைந்ததும்
கனவு என்ற மூன்றெழுத்தில்...!!

அன்பு அகன்று சென்றதும்
விழி நீரில் சரிந்தது விழுந்ததும்
மூழ்கி எழுந்து மூச்சு விட்டதும்
தனிமை என்ற மூன்றெழுத்தில்...!!

இன்று வரை
இருள் என்ற மூன்றெழுத்தில்
முடிவு என்ற மூன்றெழுத்தில்
தேடல் என்ற மூன்றெழுத்தில்
வாழ்வு என்ற மூன்றெழுத்தில்....!!
அதனால் தான் என் பெயரும் மூன்றெழுத்தில்....!!

எழுதியவர் : பவிதா (23-Dec-14, 11:09 am)
Tanglish : moondreluththil
பார்வை : 126

மேலே