உணர்வுகளின் ஊர்வலம்

அம்மா
புரண்டு படுத்தால் இறந்து விடுவோமோ என்று
தன் தூக்கத்தை மறந்து
துக்கத்தை மறைத்து
உனக்காக விழித்திருக்கும்
கண்கள் அன்னையின் கண்கள் மட்டுமே ............
பெற்றோரின் ஆசை மகள்
சகோதரனனின் அன்பு சகோதரி
சகோதரியின் சக தோழி
கணவனின் கனவுக் காதலி
இந்த அனைத்து உறவுகளையும்
ஈடாக்க இறைவனால்
பரிசளிக்கப்பட்ட இனிய தேவதை அவள் ............
எந்த வேலை செய்தாலும்
குறை சொல்லும் - மாமியார்
எதற்க்கெடுத்தாலும்
சண்டை போடும் __ நாத்தனார்
வீட்டிற்க்குள்ளேயே
வாத்தியாராய் நடக்கும் __ மாமனார்
அலுவலக விருப்பு வெறுப்புகளை
மனைவி மீது மட்டுமே காட்டும் __ கணவன்
என அனைத்து உறவுகளையும்
சமாளித்து உனக்காக மட்டும்
வாழ துடிக்கும் ஒரே இதயம் .............
அணைப்பதற்கு கைகள்
அழுவதற்கு கண்கள்
சாய்ந்துக்கொள்ள ஒரு மடி
அது எப்பொழுதும்
உனக்காக மட்டுமே
காத்திருக்கும் .................
இந்த அனைத்து உணர்வுகளின்
ஊர்வலத்தின் நடுவில் அவள்
வெற்றி தேவதையாக தெய்வமாக
வலம் வருகிறாள் நம் அனைவரின் வீட்டிலும்


இப்படிக்கு

முதலாம் ஆண்டு
சீதலெட்சுமி இராமசுவாமி கல்லூரி
திருச்சி _ 2 .

எழுதியவர் : பொன்மொழி (28-Oct-14, 7:20 pm)
Tanglish : unarvukalin oorvalm
பார்வை : 271

மேலே