இசை பிரியா எனும் ஷோபா

என் சகோதரியின் மரணம் எனக்கு தனிமையுடன் கூடிய சோகம்
எனும் வலியை மட்டுமே தந்திருக்கும்...!

என் சகோதரியின் அலறர்களும் கதறர்களும் என் செவிகளில்
ஒலிக்கும் போது அவள் ஏன் பிறந்தால்
நான் ஏன் இன்னும் இருக்குறேன் என்று
என்னுள் எழும் வினாக்களுக்கு விடை அறியேன் ...!

சில தருணங்களில் இந்த மிருக உலகில்
மலர்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதில்லை
ஆதலால் நாம் முள் எனும் கூர்மையை கொண்டு
மிருகத்தை கொதறி எரிவதில் தவறேதுமில்லை...!

முள்ளாய் இருந்தும் எனது கூர்மையை
ஜனநாயகம் எனும் கத்திரியைக் கொண்டு
ஐந்து ஆண்டுக்கொருமுறை நானே வெட்டி கொண்டேன்...!

தவறு என்னுடையது
பாவம் என் சகோதரியுடையது
பழி வழக்கம் போல் என் அண்ணன் மீதே...!

மகிழ்ச்சி மிருகங்களுக்கும் அதன்
எச்சம் திண்ணும் கழுகளுக்கு மட்டுமே...!!

எழுதியவர் : ரமேஷ் ஏகாம்பரம் (3-Nov-14, 8:56 pm)
பார்வை : 655

மேலே