தோல்வியுற்ற தோழனுக்காக

(நண்பன் காதல் தோல்வியில் கலங்கியபோது இதயம் கனக்க எழுதியது)

உறவும் இரவும்
உதவாப்பொய்யடி
ஒரு பார்வையில்
என்னை
உருகச்செய்யடி

கானலென
தெரிந்தும்-மனம்
உன்னைதானே
நேசிக்கும்

கண்கள்
எப்போதும்
உன் பெயரைதானே
வாசிக்கும்

அன்றோ
காதலால்
ஒளி கொடுத்தாய்
இன்று
இதயத்தில்
ரணமாய்
வலி கொடுத்தாய்

உன்னால்
என் காதல்
விடிந்தது
இன்று
உன் காலடியில்
அதன் பயணம்
முடிந்தது

பார்வைகள்
கலங்குதடி
பாசங்கள்
பொய்யென்று
விளங்குதடி

என்ன சொல்லி
தேற்றுவதோ
யாருவந்து
ஆற்றுவதோ

கண்ணெல்லாம்
நீராக
என் கண்ணே
எனக்கு
வேறாக

இதற்குமேல்
என்னவுண்டு
காண்பதற்கு

காரணமொன்று
சொல்
இனிமேல் நான்
வாழ்வதற்கு

வாழ்க்கை
நெடுந்தூரம்
இது உயிர்
தாங்காத
பாரம்

இதயம்
துடித்தது
உனக்காக

நீ போனபின்பு
இன்னும்
துடிப்பது
எதற்காக

கண்ணீர்
வழியே
உயிர் ஒழுகி
ஓடுதே

மெழுகான
உள்ளமொன்று
இளகிளகி
வாடுதே

சொல்லியழ
யாருமில்லை
சொந்தங்கள்
ஏதுமில்லை

எல்லாமும்
எனக்கு
நீயானாய்
இன்று
என்னையே
எரிக்கின்ற
தீயானாய்

எழுதியவர் : அலைகள் (12-Nov-14, 3:07 pm)
பார்வை : 98

மேலே