எனது அக்கா

கருவறைதனில் இடம் தந்த அன்னைக்கு பிறகு- உனது
மடியறைதனில் இடம் நீ அளித்தாய்.................
கருவிழி திறந்து நான் பார்க்கும்போதெல்லாம்- என்
கண்முன் தோன்றி ஆனந்தம் நீ அடைந்தாய்...............
உனது
கண்களால் பல கண்ணாம்மூச்சி ஆடி- என்
இதழ்களில் புன்னகையை நீ உதிரவைத்தாய்............
எனது
கண்களில் சிறுதூசி விழுந்தாலும்
கண்ணீர் வடித்து நீ துடித்தாய்............................
கைவீசி தனியாய் நான் நடக்கும்போது-என்
கரம் பிடித்து கல்வியை நீ உரைத்தாய்............
கல்வி மட்டும் உன்னை உயர்த்தாது என கூறி-பல
கனிவான பழக்கங்களையும் நீ கற்பித்தாய்...............
எனது
கனவுகளை நனவாக்க எப்போதும்-எனை
வழிநடத்தி நீ சென்றாய்.............
உனது
கைவிரல் அணைப்பினிலே என் கவலைகள்
அனைத்தையும் நீ குறைத்தாய்................
காலமெல்லாம் உன் வாழ்வில் கடைசி வரை நான் இருப்பேன்
கலையான உன் முகத்தில் சந்தோசத்தை என்றும் வரவழைப்பேன்...
"இரண்டாம் அன்னையாய்" உன்னை அளித்த இறைவனுக்கு
என் நன்றி.........................
என் இறுதிநாள் வரையிலும் நான் பிரியேன் உனைஅன்றி..............

இப்படிக்கு,
உனது தம்பி.

எழுதியவர் : த.Hussain (27-Nov-14, 7:02 pm)
Tanglish : enathu akkaa
பார்வை : 684

மேலே