என்னவனே

என்னவனே !!!

உன்னை மலர்போல்
மென்மையானவன்
என்றேனே அதனால்
நீ நந்தவனத்து சொந்தமாகிவிட்டாயோ.!

உன் குரல் தேன்போலே
இனிமை என்றேனே
அதனாலேயே நீ தேனீக்களுக்கு சொந்தமாகிவிட்டாயா?

உன் முகம் முழுமதி
என்றேனே அதனால்
நீ ஆகாயத்திற்கு
சொந்தமாகிவிட்டாயா?.!

உன் இதழ்கள் கனிந்த
கோவைப்பழம் என்றேனே !
அதனால் நீ கொடிகளுக்கு சொந்தமாகிவிட்டாயா? ..!

உன் பற்கள் முத்துக்கள் !
போல் பிரகாசம்
என்றேனே அதனால் .
நீ கடலுக்கு சொந்தமாகிவிட்டாயா?

நீ எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க
உன்னை எப்படி வர்ணிப்பேன் கண்ணா !!!!

எழுதியவர் : பந்தார்விரலி (30-Nov-14, 7:11 pm)
சேர்த்தது : பந்தார்விரலி
Tanglish : ennavane
பார்வை : 135

சிறந்த கவிதைகள்

மேலே