காலங்காத்தாலே
காலைக் கிளியே!
சோலைக் குயிலே!
மேலே எழும்பும்
சூரியக் கதிரே!
தூரத்தில் ஒளியும்
நிலவின் பிறையே!
ஈரத்தில் நடுங்கும்
மலரின் இதழே!
மாவென அழைக்கும்
பசுவின் கன்றே!
ஆவென துயிலெழும்பும்
அழகிய சிறாரே!
திடுக்கென விழித்த
கோழியே சேவலே!
அனைவருக்கும் எனதினிய
காலை வணக்கம்!