நீர்

நதிநீர் இணைப்புக்குள்
குடிநீர் மறைந்துவிடும்
காவரி வருவதற்குள்
மண்லாரி பிழைத்துவிடும்
முல்லைபெரியாறு முடிவதற்குள் நம்பிள்ளை பெரிதாகி
மறந்துவிடும்

வானம் பொழிந்தாவது
காத்திடுமா...........?
வாகனம் புகைபட்டே அது
ஓடிவிடும்
தண்ணீர் இல்லா பாலையாகி
எலிக்கறி புசிக்கும் நாளும் வரும்
அன்று மடிவது யாரும் இல்லை
நம் சந்ததி எனும் எண்ணமில்லை

எக்கேடு கெட்டா எனக்கென்ன
இன்னைக்கு ஓடுதே நம்பொழப்பு
நா வரண்டு சாக இன்னும்
நாளிருக்கு

எழுதியவர் : கவியரசன் (11-Dec-14, 8:15 am)
Tanglish : neer
பார்வை : 103

மேலே