மனதின் வலி
அடித் தோழியே அன்றே
என் உயிரை மரணம்
கேட்டது - நான்தான் சண்டை
இட்டு பிடித்து வைத்தேன்
என் தோழி அழுவாள் என!!!"!
அடி போடி கல்லறை
மனம் கொண்டவளே இன்று
அந்த மரணமே என்னை
பார்த்து சிரிக்கிறது!!!
எல்லாம் சில காலம்
உணர்ந்தேன் இந்த மரண
எச்சரிக்கையில் தோழி !!!!
தாய்க்கு பின் தாரம் - யார் சொன்னது?
இருவருக்கும் மேல்
உள்ள தெய்வம் தோழிதான்
இது நான் சொன்னது !!!!
இனி நீயும் சிலைதான்
என்பதை உணர்ந்தேன் !!!
சில நாள் பேச
முடியவில்லை என்னால் - அழுதால் அம்மா,
அரவணைத்தால் சகோதரி,
ஆறுதல் சொல்ல தோழி எங்கே?
படுக்கையில் பேச முடியா
பிணமா கிடந்தேன் தோழியே
உன் நட்பின் நினைவோடு!!!
என் விபத்தின் வலியை விட
என்னுள் நட்பின் வலி மிகவும் அதிகம்!!!,
கண்களை விட
கண்ணீருக்கே வலி அதிகம்
என்பதை உணர்த்தி விட்டாய்!!!