ஆயா
என் அம்மா என்னிடம்
சொன்னாள்
ஆயா-
வெத்தலைப்பையில்
பாக்கெட்டி ,காசிக்கட்டி
சுண்ணாம்பு தடவிய
ஒருருபாய் எப்போதும்
இருக்கும்
ஆயா நெற்றிப்பொட்டை
பச்சைகுத்திருக்கும்
ஆயா பழைய
செப்பு வளையல்களை
அதோ அந்த முருங்கை
மரத்தில்தான் மாட்டி வைக்கும்
ஆயாவின்
கிழ் எகிரில்
இரண்டு பற்களை தவிர
வேறு பல்கிடையாது. ஆனால்
ஆயாவுக்கு பொட்டுகள்ளை
ரொம்பப்பிடிக்கும்
ஆயா சிரித்தாள்
கலகலவென சலி சப்தம்
இருக்கும்
எங்கள் சட்டையையும்
ஆயாதான் துவைக்கும்
மண்ணனைவிளக்கு
ஆயாவின் புடைவை
கிழித்து
ஆயாவே திரிப்போடும்
ஆயாவின்
தாலாட்டு
கேட்க இனிமயாய் இருக்கும்
ஆயாதாலிக்கயிரில்
ஊக்குப்போடும்
ஆயாதிண்ணையில்தான்
தூங்கும்
ஆயா தலையனையாய்
தாத்தா,அப்பா பழையதுணியை
தினித்துதான்
வைத்துக்கொள்ளும்
ஆயாவிற்க்கு சின்னதம்பிப்படம்
தான் மிகபிடிக்கும்
ஆயா கரிதிண்ணாது
மீன் திண்ணாது.
ஆயா சாப்பிட்டதட்டு
அவங்க அம்மா தந்தது
சாகும்வரை அதில்தான்
சாப்பிடுவேன் என்று
உறுதியாய் இருக்கும்
ஆயா மட்டும்
ஒரு புளியமரத்து
புளியையும்
தனியாக உடைத்து கொட்டையெடுக்கும்
ஆயா
நாயிக்கு
சோற்றை எச்சில்
கையால் வைக்காது.
தாத்தாவைவிட ஆயா
வேகமாய் புள் அறுக்கும்
ஆயாவுக்கு
நான் அண்ணன் மகள்
வேனும்
என்று ஆயாவைப்பற்றி
சொன்ன அம்மாவிடம் கேட்டேன்
ஆயா
இப்ப எங்க
செத்துடிச்சா ? என்று
அதற்க்கு வாய் முடிய
என் அப்பாவுக்கு
தெரியுமாம்
அவள்
ஏதோ ஓர் ஊரில்
பிச்சையெடுத்துக்கொண்டிருப்பது.......!