சாதி ஒழி மதம் அழி சாதி

தொழிலை வைத்து பிறந்தது
சாதி என்றால் அந்தத்
தொழிலில் என்ன கீழ்த்தரம்
கண்டாய் ஒதுக்கி வைக்க?

எல்லா கடவுள்களிலும் பெரியவர்
உன் கடவுள் என்றால்
அந்தக் கடவுள்கள் அடித்துக்கொள்ளட்டும்
இடையில் நீ எதற்கு?


உயிர்களிடத்தில் சாதி உண்டென்றால்
அவர் உண்டாக்கும் பொருட்களுக்கு
மட்டும் விதிவிலக்கா?

வேறு மதத்தில் பிறந்தவனென்ன
வெறும் கள்ளிச் செடியா?
வெட்டிவிட்டு குற்றமற்று போவதற்கு?

சாதியையும் மதத்தையும் படைத்தது
கடவுளென்றால் அந்தக் கொடூரச்
சாத்தான் நமக்கு தேவையில்லை

உயிர்களிடத்தில் அன்பைக் காண்பவன்
காண்பதில்லை இந்தத் தொல்லைதரும்
சாதி மத பிரிவினைகளை


இந்த உலகத்து உயிர்களெல்லாம்
ஒருசேர ஆனத்தமாய் இருந்திடவே
சாதி மத பிரிவினை களை

எழுதியவர் : GopalakrishnanR (15-Jan-15, 8:17 pm)
பார்வை : 65

மேலே