சாதி ஒழி மதம் அழி சாதி “பொங்கல் கவிதைப் போட்டி 2015”

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சாதி பிரிவொக்குமோ எம்மானிடருக்கு?
ஆண்சாதி பெண்சாதி அவன் படைத்தான்
மேல்சாதி கீழ்சாதி எவன் படைத்தான்?
சாதி வெறி சாத்தானெல்லாம்
சாக்கடையில் மூழ்கட்டும்
சாதிக்க பிறந்தவனெல்லாம்- என் சாதி
மனிதனென்று உரைக்கட்டும்…
மதவெறி மடையர்களே
உம் மதம் பற்றி தெரிவீரோ!
எம்மதமும் சொல்வதென்ன?
யாவரும் அறிவீரோ!
சமத்துவம் மட்டும் தானே- அங்கே
சத்தியமாய் உரைக்கிறது.
மதம் பரப்பும் மானிடனே
மண்ணுக்குள் சென்றபின் என்ன செய்வாய்?
மண்புழுவிற்க்கும் மதம் புகட்டுவாயா!
சாதிகளெல்லாம் சாயங்களாய் கரையட்டும்,
மதங்களெல்லாம் மாயமாய் மறையட்டும்,
மகத்தான மனிதம் மட்டும் இப்புவியினில் மலரட்டும்.

பெயர்: கார்த்திகேயன். ப
வயது: 25
வசிவிடம்: எலியத்தூர், சின்னசேலம்-606201.
நாடு: இந்தியா
அழைப்பிலக்கம்: 9994652091

எழுதியவர் : கார்த்திகேயன்.ப (15-Jan-15, 8:26 pm)
பார்வை : 117

மேலே