பின்பற்ற வேண்டிய பத்து

பின்பற்ற வேண்டிய பத்து
* காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.
* அன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டும் என்ற இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
* புண்ணியநதிகள், கோமாதா, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர் ஆகியோரை குறைந்தபட்சம் ஒரு நிமிடம் நினைப்பது அவசியம்.
* வாரத்தில் ஒருநாளாவது அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள்.
* அக்கம் பக்கத்தினரையும், மற்றவர்களையும் அன்போடு நேசித்து வாழுங்கள்.
* உணவு உண்ணும் முன் மிருகங்களுக்கோ, பறவைகளுக்கோ சிறிது அளித்துவிட்டு பிறகு சாப்பிடுங்கள்.
* உங்களால் முடிந்த அளவுக்கு தர்மம் செய்து வாருங்கள்.
* நெற்றியில் எப்போதும் திருநீறு, குங்குமம் அணிந்து கொள்ளுங்கள்.
* தூங்கச் செல்லும் முன் அன்றைய நாளில் நடந்த நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்து திருத்திக் கொள்ளுங்கள்.
* கடவுளின் நாமத்தை 108 முறையாவது உச்சரித்துவிட்டு பின்னர் உறங்குங்கள்.

எழுதியவர் : முரளிதரன் (17-Jan-15, 9:38 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 424

சிறந்த கட்டுரைகள்

மேலே