காதலின் உச்சம்

என்னவன் விழி பார்த்து

இனியவன் முகம் நோக்கி

பொன்னுடல் மேனி தொட்டு

பூவுடல் ஆரத்தழுவி

மார்பதனில் முகம் புதைத்து

கரம் இரண்டால் தலை கோதி

இடைகச்சை நழுவவிட்டு

இமை இரண்டும் இறுக மூடி

இதழதனை இழந்து விட்டு

கால்விரலில் கோலமிட்டு

இளமைதனை எரியவிட்டு

சுவாசமதில் சூடு எற்றி

வியர்வையில் உடல் குளித்து

வினாடியில் உலகம் மறந்து

உனை என்னில் புதைய விட்டு

உயிரெழுத்து மெய்யெழுத்து
மீண்டும் பயின்று

இலக்கணம் எல்லாம் தலைகீழாய் தொட்டு

உடல் நழுவி தரை விழுந்து

காதலின் உச்சம் கண்டு களித்தேன்
கண்ணீர் பொங்க…

எழுதியவர் : வைகுண்டராமன்.ப (24-Jan-15, 11:40 am)
சேர்த்தது : வைகுண்டராமன்.ப
Tanglish : kathalin echam
பார்வை : 207

மேலே