ரவியும் ராமனும்

ரவியும் ராமனும்

இருளின் அரவணைப்பின்
விடுதலைதனை பெற்று
வேதனை தன் அகன்று
வெற்றியுடன் திரும்பும் அந்த
செஞ்சிவந்த ரவிதனின்
தரிசனமது கிட்டிடிட
பனிமூட்ட சீலைதனை
பரவசத்துடன் மேல்தூக்கி
புவியரசியவள் எதிர்நோக்கி
செல்கிறாள்;

இலங்கையிலும் சீதையவள்
இராவணனின் கைதியாய்
அசோகவனத்தில் மனமுருக
இராவணனை கொன்று
அரக்கர் படையை வென்று
வெற்றியுடன் வந்திட்ட
செஞ்சிவந்த ரகுகுலத்தான்
ஸ்ரீ ராமன் நாதனவன்
தரிசனமது கிட்டிட
தலை முகட்டு சீலைதனை
பரவசத்துடன் மேல் தூக்கி
புவிமகளவள் எதிர்நோக்கி
செல்கிறாள்;

புவியரசியவள்
எதிர்நோக்கி வந்திடையில்
கதிரவன் முகமலர்ந்து பூமிக்கு
பொன்னாடை போர்த்துகிறான்;

புவிமகள் சீதையவள்
இராமனிடம் மீண்டடைய
நாதனவனோ நிலையற்று சீதைக்கு
தீயாடை போர்த்துகிறான்!

சம்பத்

எழுதியவர் : கல்கத்தா சம்பத் (18-Apr-11, 5:13 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 285

மேலே