புலிகளை காத்திடுவோம்
வங்க வனத்தில் தங்க நிறத்தில்
சுற்றிய புலிகள் பலப்பல;
வெறியுடன் அவற்றை வேட்டையாடி
வீழ்திட்டோர் பலப்பல;
கொன்ற புலிகளின் தோல்தனை விற்றிடும்
கள்ளர் கும்பல் பலப்பல;
புலியின் எலும்புகூட்டை கடத்திசென்றிடும்
வஞ்சகரும் பலப்பல;
தாயை இழந்த புலிக்குட்டிகள் சாவும்
நம் வனத்தில் பலப்பல;
காட்டின் ஊடே சாலை போடும்
அறியா அரசும் பலப்பல;
எஞ்சிய புலிகள் கூண்டின் உள்ளே
அவைகள் கூட்டும் மிகச்சில;
புலிகள் இல்லையேல் வனமில்லை
வனமில்லையேல் மரங்கள் இல்லை
மரங்கள் இல்லையேல் மழை இல்லை
மழை இல்லையேல் மனிதரும் இல்லை;
புலியை காக்கும் பணியில் நாம்
புவிதனை நன்று காத்திடுவோம்
செய்த தவறை செவ்வனே திருத்தி
புலிகளை வாழ வழி செய்திடுவோம்!