கல்வி மண் பயனுற வேண்டும்

பள்ளியின் பெருமை
அதை உருவாக்கியவர்களால் அல்ல.
அது உருவாக்கியவர்களால் தான்.

இன்றோ
சுய தொழில் பட்டியலில் ,கல்வி .

கல்வி எனும் அமுத சுரபி
காய சண்டிகை களிடம்.

கல்வித் தந்தைகளின் வீட்டில்
காசாளர் பதவியில் கல்வி.

மதிப்பெண் பிரசவம் நடக்கும்
லேபர் வார்டு களாய்
பள்ளிகள் மாறிய போது
குறைப்பிரசவ குழந்தைகள்
மருத்துவராகி விட்டனர்.

மதிப்'பெண் ' கிடைக்க
மாப்பிள்ளை சீராக
கொடுக்க வேண்டியவை
ஒழுக்கம்,உழைப்பு.
இங்கோ
மாணவர்கள் பிரம்மச்சாரிகளாகவே
அலைகிறார்கள்.

ஊற்றை உருவாக்கச் சொன்னால்
ஊருணி நீரை மொண்டு வரை
உபதேசம் செய்கிறார்கள் .

நிறைய மொண்டு வர
கமலை இறைக்கும்
காளை போதாதா?

மண் பயனுற
ஊற்றுகளை உருவாக்க
உறுதி எடுப்போம்.!!

எழுதியவர் : (7-Feb-15, 7:13 pm)
சேர்த்தது : korkai A Judin
பார்வை : 97

மேலே