காத்திருப்பாயா

கொட்டும் பனிக்காலம்தான்...
உந்தன் கதகதப்பு
கிட்டும் என காத்திருக்கிறேன்....

அடைத்து பெய்யும் மழைக்காலம்தான்...
துடைத்துவிட
உன் தாவணி
கிடைக்கும் என காத்திருக்கிறேன்....

வத்திவிட்ட வெயில் காலம்தான்
ஒத்திவிட உந்தன் இதழ்கள்
கிடைக்கும் என காத்திருக்கிறேன்....

கசந்த காலங்களை
கடந்ததெல்லாம்- கன்னி உனக்கு
வசந்த காலத்தை அளித்திடவே....

நம்பிக்கையுடன்
" காத்திருப்பாயா?...."

எழுதியவர் : வினோத்சுப்பையா (12-Feb-15, 11:03 pm)
பார்வை : 129

மேலே