காதல் வன்முறை
பத்தாம் வகுப்பு மாணவனுக்கும்
ஏழாம் வகுப்பு மாணவனுக்கும்
காதல் மோதல் கத்திக்குத்தில் முடிந்து
மருத்துவ மனையில் சிகிச்சைக்குச் சேர்ப்பு
படிக்கும் வயதில் பாழாய்ப்போன காதல்
பெற்றவர்க்கும் பள்ளிக்கும் விளம்பரம் ஊடகங்களில்
ஊடகங்கள் காதலையே வாழ்க்கையாய்க் காட்டுவதால்
காதலுக்குக் கண்ணுமில்லை காதலிக்க வயதுமில்லை.
ஊடகத் தீமையை உடைத்தெறிய வேண்டுமெனில்
கற்றோரும் பெற்றோரும் இணைந்திட வேண்டும்
எவர்பிள்ளை கெட்டால் நமக்கென்ன என்றெண்ணும்
மனப்போக்கை மாற்றி நல்லமனிதராய் மாறணும்.
முதல் நான்கு வரிகள் (07-09-2014) சன்செய்தியில் இரவு 8.30 மணிக்கு படித்த செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டது.