தடுத்திடுவீர் ஏற்க்கமுடியவில்லை

நான்....
மரமாக பிறந்தேன்
வெட்டி விழ்த்தினீர்...
ஊரும் பாம்பாக பிறந்தேன்
அடித்தொழித்தீர்...
பறக்கும் பறவையாக பிறந்தேன்
சுட்டொழித்தீர்...
பாயும் புலியாக பிறந்தேன்
என் வீட்டையழித்தீர்...
ஆறறிவு மானுடனாக பிறந்தேன்
ஆறா வடுவாய் பலவளீத்தீர்...

ஆவேசமாய்
இவையனைத்தும் நிகழும்
மண்ணாய் பிறந்தேன் - அங்கே
துளையிட்டீர் ஏற்றுக்கொண்டேன்,
பிணம் புதைத்தீர் ஏற்றுக்கொண்டேன்,
மாசு செய்தீர் ஏற்றுக்கொண்டேன்,
விதைத்தீர் மகிழ்ச்சிகொண்டேன்,
இன்னும் பலசெய்தீர் ஏற்றுக்கொண்டேன்,
ஆனால்
உயிரருத்து, கற்பழித்து என்னில்
செய்வதை ஏற்க்கமுடிவதில்லை
உயிரில்லா என்மேல் - அவர்கள்
உயிர்குருதி பாய்வதை - உயிரற்ற
என்னால் தடுக்க முடியவில்லை - ஆகவே
தடித்திடுவீர் இச்செயலை
கைவிடுவீர் வன்மையை....

எழுதியவர் : மணிசந்திரன் (16-Feb-15, 2:21 pm)
பார்வை : 50

மேலே