தங்கை கிருத்திகா-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ~~ சந்தோஷ்

விறுவிறுப்பான ஓட்டம்
இந்த மங்கையின் சிந்தனையோட்டம்
சுறுசுறுப்பான ஆட்டம்
இந்த நங்கையின் கவிதையாட்டம்.
திகில் திகில் என்று
பகீர் பகீர் திருப்பங்கள்
இந்த தங்கையின் கதையோட்டம்.!

வியக்கிறேன்....!
எப்படிப்பட்ட பேனாவினால்
எவ்வாறான மையினால்
எந்தவிதமான திறமையினால்
எழுதப்படுகிறது மூவிரல்களினால்
பிரமிப்பான படைப்பாக்கங்கள் ?


நானொரு உறுதிமொழி தருகிறேன்
எனதருமை தோழர்களே..!
இந்த தங்க எழுத்துதாரகை
அயராது பாடுப்பட்டு
அசராமால் எழுதிக்கொண்டிருந்தால்
இந்த பிரபஞ்சமே வியந்து
மயங்கி ரசித்து கைத்தட்டும்.
இந்த மானுடமே பரவசப்பட்டு
ரசனை கிளர்ச்சியில் கொண்டாடும்
ஆம்.. ஏதோவொரு மந்திரசக்தி
நிச்சயம் இருக்கிறது.
இந்த மந்திர எழுத்தாளினிக்கு.!

தங்கையே..! கிருத்திகா தாஸ்..!
இன்று உன் பிறந்தநாளாம்...!
சற்று உன் அறையைவிட்டு
வெளியே வா...!

-அங்கே ஒரு வெண்ணிறபுரவி
-அதன் மேல் ஒரு தேவதை
-அவள் கையில் ஒரு பூங்கொத்து.
-அந்த பூங்கொத்தில் பூக்களாக
-நான் சேகரித்த தங்கநட்சத்திரங்கள்
-அந்த நட்சத்திரப்பூக்களில் மின்னிடும்
-உன் அண்ணனின் பாசமிகு வாழ்த்துகள்.!
--பெற்றுக்கொள் தஙகையே..!

*** இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கிருத்திகா தாஸ்****

எல்லா வளமும் பெற்று
நிம்மதி செல்வத்தோடு
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.!

வாழ்க! வாழ்க ! நீடுழி வாழ்க..!

-------------------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.
17-02-2015

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (17-Feb-15, 12:24 am)
பார்வை : 2596

மேலே