என்னில் கரையாமல் இருக்கும் உன் நினைவுகள் 555

என்னவளே...

உன்னோடு நான் நடை போட்ட
மாலை நேர கதிரவன்...

பகலில் என் தனிமையில்
வரும் நிழலாய் உன் நினைவுகள்...

இரவில் உன்னோடு நான் கைபேசியில்
உரையாடிய நினைவுகள்...

இருளில் ஒளிரும் விண்மீனாய்
துணைக்கு வரும் உன் நினைவுகள்...

என் நெற்றியில் நீ பதித்த
முதல் முத்தம்...

நான் உறங்கினாலும்
உறங்கவில்லையடி...

உன் நினைவுகள் மட்டும்...

என்றோ நீ அனுப்பிய குரல்
பதிவு குறுந்தகவல்...

இன்றுவரை அதுதான்
என்னை எழுப்பும் இன்னிசை...

என் விழியின் ஓரம்
கலங்கினாலும்...

கலங்காமலும் கரையாமலும்
இருக்கிறது...

உன் நினைவுகள்
மட்டும் என்னில்...

நானே கரைந்துவிடுமுன்...

வந்து செல் என்
முன்னாள் ஒருமுறை...

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (9-Mar-15, 9:22 pm)
பார்வை : 2299

மேலே