உன்னால்
உன்னைப் பார்க்கும்பொழுது
ஒரு பதட்டமான புன்னகை...
உன்னைக் கடக்கும்பொழுது பார்க்கவா? வேண்டாமா?
என திணறிடும் கண்கள்...
உன்னுடன் பேசும்பொழுது நியாபகமறதிக்கு
உள்ளாகும் மனம்...
நீ அருகில் அமரும்பொழுது
ஒரு அதிர்ச்சியலை என் உடல் அணுக்களிடையே...
நீ தழுவிய பொருளை நான் தொடுகையில் என் மீது
சில்லென்று பாயும் மின்சாரம்...
ஐய்யகோ! இதுதான் காதலின் அறிகுறியோ?

