வார்த்தைகளின் விபச்சாரம்

நெருப்புக் கங்குகளை
மகரந்தமாக சுமந்து நிற்கும்
பூ இது !

பனிக்கூலினுள்
எரிமலை மறைக்கும்
சூட்சமம் இது !

அன்பின் அதரங்களில்
கரிகளை பூசும்
கொடுரம் இது !

கவிதை எழுத தெரிந்தும்
காகிதங்களை கிழிக்கும்
மர்மம் இது !

திருக்குறள் : யாகாவா ராயினும் நா காகக காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு.

எழுதியவர் : தமிழ்.ஹாஜா (21-Mar-15, 12:42 pm)
பார்வை : 90

மேலே