வார்த்தைகளின் விபச்சாரம்
நெருப்புக் கங்குகளை
மகரந்தமாக சுமந்து நிற்கும்
பூ இது !
பனிக்கூலினுள்
எரிமலை மறைக்கும்
சூட்சமம் இது !
அன்பின் அதரங்களில்
கரிகளை பூசும்
கொடுரம் இது !
கவிதை எழுத தெரிந்தும்
காகிதங்களை கிழிக்கும்
மர்மம் இது !
திருக்குறள் : யாகாவா ராயினும் நா காகக காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு.