சூரியனுக்கு என்ன கேடு

சூரியனுக்கு என்ன கேடு
புல்லின் நுனியில்
பனித்துளி எழுதிய கவிதையை
அழித்துவிட்டுப் போகிறது

நட்சத்திர எழுத்துக்களால்
சந்திரன் எழுதிய கவிதையையும்
அழித்துவிட்டுப் போகிறது

இலைகள் கொண்டு
காற்று எழுதிய கவிதையை
ஏன் அழித்துக் கொண்டேயிருக்கிறது

வேர்வைத்துளி கொண்டு
சூரியன் எழுதிய கவிதையை
காற்று அழித்து விடுகிறது.

எழுதியவர் : (4-Apr-15, 1:30 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 43

மேலே