காதல் கனவா

வலி அறிந்தேன் உன் காதல் தந்த காயங்களால்
வழி மறந்தேன் உன் காதல் செய்த மாயங்களால்
உலகமே சுமையாகி போனதன்பே
உயிரிலே உன் காதல் கலந்ததன்பே
உதிரத்தில் நம் காதல் தீட்டினேன்
மனதிலே உனை நாளும் போற்றினேன்
மறுத்து போனாயடா,என்னை
மறந்து போனாயடா
மீண்டும் ஏற்பாயா?
நம் காதல் மீட்பாயா?
உன் அனைபினில் எந்தன்
ஜென்மம் மோட்சம் பெருமெ
உன் தீண்டுதலில் எந்தன்
நாடி சிலிர்த்திடுமே
நீயே என் தலைவா ................
நீயே என் முதல்வா ................
மீண்டும் மன்னனாய் நம்
காதல் ஆள்வையா ?

எழுதியவர் : நிவேதா ஸ்ரீ (6-Apr-15, 1:24 pm)
சேர்த்தது : நிவி
Tanglish : kaadhal kanava
பார்வை : 206

மேலே