இயற்கையில் சோகத்தை தொலைத்து விடு

கண்ணிலே சோகம் கொண்டு
நிலம் வெறிக்கும் பெண்ணே.. !!
இயற்கை சொல்லும் ஆறுதல் எல்லாம்
கொட்டி கிடக்குது உன் முன்னே.. !!

நுரையாக உடைந்த பின்னும்,
அலை மீண்டும் அலையாக, ஆர்ப்பரிக்கும் அதிசயத்தை
நீ பார்த்ததில்லையா ?

இலை எல்லாம் உதிர்ந்த பின் உருவாகும்,
தளிரிலை மர அழகை நீ கண்டதில்லையா?
கருமேகம் சூழ்ந்தாலும், குளிர்மழை தரும்
சுகத்தை நீ உணர்ந்ததில்லையா ?

ஆயுட்காலம் ஒருநாள், என்றறிந்த பின்னும் கூட
பூக்கள் சிந்தும் புன்னைகையில்
மனதை நீ தொலைத்ததில்லையா ?

வேப்பம்பூவில் துளித்திருக்கும்,
தேன்துளியை நீ சுவைத்ததில்லையா?
நிலவொளிக்கு முன்னும் கூட, மின்னும்
மின்மினி அழகை நீ ரசித்ததில்லையா?

உன் புன்னைகை ஒளிக்கீற்றில்,
சோகம் எல்லாம் சாம்பலாகும் கதை நீ கேட்டதில்லையா ?

இயற்கை எழுதிய கவிதை எல்லாம் இப்போதே படித்து விடு..!!!
உன் புன்னகையையும் கொஞ்சம், புது வரியாய் அதிலே சேர்த்து விடு.. !! :-) :-)

எழுதியவர் : நிஷாந்தினி.கே (9-Apr-15, 2:24 pm)
பார்வை : 195

சிறந்த கவிதைகள்

மேலே