ரம்பம் கொண்டு

முட்டாளாய் ஒரு போராட்டம்!
யாருக்காக...?
மரத்தின் மீது நீயே
மடி தேடியமர்ந்து
மரத்தை ரம்பம் கொண்டு
மண்ணாக்கும் மாயை
முட்டாள் தனமன்றோ...?
மண்ணைக் காக்க
மண் வாசிகளைக் காக்க
மனிதனோடு போராடித் தோற்ற
மரங்கள் வளர்ச்சி இன்று
உன்னால் உடைபடுமோ...?
மறந்துவிடு எங்கள் வாடிக்கைகளை!
மரம் ஏறி பிழைத்துக்கொள்!
முடிந்தால் முட்டாளாகாமல்
முனைந்து நாங்களும்
மரங்கள் காத்திடுவோம்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (9-Apr-15, 7:01 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 192

சிறந்த கவிதைகள்

மேலே