அட்சய திருதியை - நகைக்கடைக்காரனின் கொள்ளையர் தினம்

அட்சய திருதியை - நகைக்கடைக்காரனின் கொள்ளையர் தினம்..!

அட்சய திருதியை தினமானது மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
( பரசுராமன் பிறந்த தினம் என்று சொல்ல வேண்டியது தானே...)

மணிமேகலைக்கு இந்நாளில் தான் அட்சய பாத்திரம் கிடைத்தது. அதனால் அன்று முதல் மக்களின் பசியை போக்குவதையே தன் கடமையாக கொண்டிருந்தாள்.

( மணிமேகலைக்கும் சம்ஸ்கிருத ஹிந்துக்கும் என்ன சம்மந்தம்...? பீலா விடுவதற்கு ஒரு அளவே இல்லையா...?
மேலும் மணிமேகலை தமிழர்...உங்களுக்குத் தான் தமிழரையே பிடிக்காதே....தங்கத்தை கொள்ளை அடிக்க வேண்டும்....)

" அட்சய " என்றால் குறைவில்லாதது என்று பொருள். இந்த அட்சய திருதியை மகாலட்சுமிக்கான நாள். எனவே இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது அற்புதமான பலன்களைத் தரும்.

( மகாலட்சுமி நாள்....பரசுராமன் பிறந்த நாள்....மணிமேகலை அன்னம் வழங்கிய நாள்....விட்டா அம்புட்டு பேரையும் கிறுக்கனாக்கி விடுவாங்களோ.....)

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளில் மூன்றாம் பிறை நாளன்று வருவதே அட்சய திருதியை நாள்.
இந்த வருடம் சித்திரை மாதம் 08 - ம் நாள் 21-04-2015 அன்று அட்சய திரிதியை வருகிறது.

அட்சய திருதியை நாள் முன்னோர்களை நினைத்து வணங்குவதற்கும் சிறந்த நாள். காரணம் முன்னோர்கள் அருளால், குடும்பத்தில் சாந்தி, ஆரோக்கியம், ஐஸ்வரியம் கிடைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

( முன்னோர்கள் அருளால் குடும்பத்தில் சாந்தி, ஆரோக்கியம், ஐஸ்வரியம் கிடைக்கும் என்றால்.....
அரசு / போலீஸ் / ரவுடிகள் / டாஸ்மாக் / பக்கத்துக்கு வீட்டுக்காரன் இவங்களாலே தானே சாந்தி....ஆரோக்கியம்...என்று எல்லாமே கிடைக்கையில்....முன்னோர்களால் என்று சொல்லுவது யாரை ஏமாற்ற.....?

நாளைக்கு ஒரு கூட்டம் கிளம்பிரும்...கோலம் போட்டு, சாமியை கும்பிட்டுவிட்டு காலையிலேயே நகைக்கடைக்கு....
அப்ப காசு இல்லாதவனுக்கு....? அதுதான் உப்பு / அரிசி இருக்குல்ல...
போற போக்கப் பார்த்தல் சாமிய மடியில வச்சு..... பெல்ட்டு போட்டு கட்டிக்குவாங்களோ....? )

( நாம வாழ்த்தெல்லாம் சொல்லவில்லை...வேறு படம் கிடைக்கவில்லை.... செய்திக்குப் பிறகு அடைப்புக் குறிக்குள் நாம....தான்..)

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (20-Apr-15, 3:17 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 248

மேலே