இனியும் வாழ்ந்திட காரணம் வேண்டுமோ

உனக்கான தினத்தில்
உனது உவகையில்
உன்னை ரசித்து
நான்
என்னை
மறக்கையில்
எல்லா மாற்றமும்
உன்னால் தானடா
நான்
முதன்முதலாய்
வாழ்க்கையில் பிறந்ததுபோல்
உணர்வதாய்
கவிதையில் என்னுடன்
நீ
பேசிடும் பொழுதினில்
என் பிறப்பின்
அர்த்தத்தை முழுதாய்
உணர்ந்திட்டேன்
இனியும் வாழ்ந்திட
காரணம் வேண்டுமோ
மரணத்தை எண்ணிய
கவலையும் இல்லையே

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (25-Apr-15, 11:31 pm)
பார்வை : 127

மேலே