ஒரு ரோஜா போதும்
ஒரு ரோஜா போதும்.
==========================================ருத்ரா
ஒரு ரோஜா போதும்.
அவள் என்னிடம் தந்தால்.
மூன்று செமஸ்டர்களும் பாஸ்
பட்டாம்பூச்சிகளின்
கோகூன்கள் பற்றி ஹை ஸ்கூலில்
சொல்லித்தரவே இல்லை.
கல்லூரி வகுப்பில் நுழைந்ததும்
தெரிந்து கொண்டேன்.
அத்தனையும் இங்கு தானா ?
உள்ளூர் வாய்க்காலில்
குளிக்கும் போதெல்லாம்
பார்த்திருக்கிறேன்
அந்த மீன் கொத்திப்பறவைகள்
நீலமும் சிவப்புமாய்
சிறகு துடித்துக்கொண்டு
ஏன் அந்தரத்தில் நிற்கின்றன என்று.?
இன்று இவள் கலர் ரிப்பனில்
துடிப்பது என் சிறகுகள்.
சுந்தர காண்டம்...
கம்பர் வராமலேயே
கண் விழிக்கும்
கல்லுரியில்
கால் வைத்த போதே.
============================================