கொடுமைக்கார காலன் …

காலன் வீட்டில் ஏதோ
கொண்டாட்டமாம் – அதற்க்கு
கூட்டமாய் அழைத்து சென்றான்
கொடுமை காரன் இவன் …..!!
அழைப்பிதழ் இல்லாமல்
அழைத்து செல்ல
அவர்கள் என்ன உன்
அரண்மனை சேவகர்களா …!!
எத்தனையோ கோடி மானிடருள்
எப்படி நீ தேர்வு செய்தாய்
இவர்களை ….
உன் சிஷ்டடில் ஏதும் பிழை உள்ளதோ
சற்று கவனி இனியேனும் …!!
கொடுமை கார காலன் நீ
நீ இருப்பதனால் தான்
மண்ணிலும் உன்னைப்போல்
நன்றி கெட்ட கயவர்கள் ….!!!
அழைத்து சென்றவர்களை நீ
வருத்தி அழைத்து விட்டாய் …
பெருத்த மனசோடு இனியேனும்
அவர் மனம் அமைதிபெற
பார்த்து கொள்ளு ….!!!
கண்டபடி அள்ளும் உன்
சேட்டைகளால் ஒன்று புரிந்தது
உயிர்களுக்கு ….
நாம் எல்லாம் மதமற்ற, மொழியற்ற
மனித நேயம் என்று ..!!!
சென்றவர்களிடம் நம்
கண்ணீர் அஞ்சலியையாவது
சென்று சேத்துவிடு பத்திரமாக …..!!!
அவர்கள் ஆத்மாக்கள் என்றும்
சாந்தி கொள்ளட்டும்….!!!
நேபாளில் மறைந்த உயிர்களுக்கு மண்ணில் இருந்து ஓர் கண்ணீர் அஞ்சலி …