ஆசையில் அவசரம்

தடையேதும் வந்திடினும்
திசைமாறி போவோம் என்று
திருட்டு முழி பார்வைகளோடு
இருப்பதேனடா????
தத்தி தவழ்கையில் நீயும்
தாயிடம் பிச்சு தின்றதை
மறக்கலாமோ மானிடா?
தங்கதொட்டிலில் அன்றும்
தாவணிக் கட்டிலில் இன்றும்
தடுமாறும் உள்ளங்கள் பல
தடம்மாறி போனவர்களும்-வரை
படம் கொண்டு கடப்பதுண்டு
வையக வாழ்வினை!
படமே இல்லை உன்னிடம்-பின்
பாய நினைப்பது ஏனடா?
மூன்று முடிச்சிட நீயும்
முந்துவது ஏனடா? -முட்டாள்
ஆசையை அடக்கிகொள்
அவனியில் உண்டு ஆயிரம் ஆயிரம்.
அன்னையின் அன்பிலே
அப்பாவின் பண்பிலே
அக்காளில் அரவணைப்பிலே
அண்ணனின் அடக்கத்திலே
தம்பி,தங்கையின் தயவிலே
அனைத்தும் கண்டுகொள்
ஆண்டவன் அளித்திடுவான்
அளவான அழகான
ஆறடிப்பெண் சிலையை..!