படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - நெருப்பில் எரியும் வெண்சங்கு-

அழகான தேவதையே! மனதில் வேதனையா?
மூங்கில்காடுகளும் தற்கொலை செய்துகொண்டது.
மடியில் வயலின் மெளனவிரதம் கொண்டதனால்........,
இருகைகளையும் கோர்த்துக்கொண்டு எதை
கணக்கிடுகிறாய்.பெண்ணின் வாழ்க்கை அடிமையானது
எத்தனை தசாப்தங்களென்றா?புதுமைபெண்
எப்போது பிறப்பாள் என்பதையா..?
மதியினில் சிந்தை மனதுக்குள் போராட்டம்
பெண்ணின் மானத்தை விலைபேசுபவனின்
நெஞ்சை குறிவைக்கும் தோட்டா அழகான
இமைகளுக்குள் புதைந்து கிடக்கிறது,
உன் பின்னாலுள்ள மாடமாளிகையை பார்த்துவிடாதே!!
சாயம் வெளுத்து போய்விடும்.அருகிலுள்ள
குளத்துநீர் தென்றலில் தேகத்தை கிள்ளி
விளையாடி பார்க்கச் சொல்லி கெஞ்சுகிறது.
மனதின் வலியை சொல்லாதே!!உலகை
சுனாமியால் அழித்துவிடும்.
உன்னை காம நாய்கள் மோப்பம் கொள்ளமுடியாது.
தாய்வீசிய சேயை பந்தமாய் நினைத்த
மரங்கள் உலகம் வீசிய உனக்கு
நிழலால் ஆடையணிந்து மறைத்துக்கொள்ளும்.
தலை வலித்தால் பட்டைதரும்,பசித்தால்
கனிகள் ஊட்டும்.மாய்ந்தால் கொள்ளியும் வைக்கும்.
மேற்படி கவிதை எனது சொந்த படைப்பாகும் என்பதை உறுதி கூறுகிறேன்.
எழுதியவர்:கவிஞர் முஹம்மத் ஸர்பான்
தொலைபேசி இலக்கம்:94 756795952
தேசிய அடையாள அட்டை இலக்கம்:972410063V