அம்மா
அம்மா!
-
கனவுகளைக் கருவாக்கி
என்னைத் தந்தாள்
மனமெங்கும் கோட்டைகட்டி
மகனை வைத்தாள் !
பள்ளிக்கு அனுப்பியவள்
பெருமை கொண்டாள்
பலர்புகழும் வேளையிலே
தலையும் குனிந்தாள் !
கல்லூரி வாசலையான்
மிதித்த போது !
கர்வத்தால் தலைநிமிர்ந்து
நடக்க லானாள் !
அரசுப்பணி ஏற்றேநான்
அமர்ந்த நாளில்
அமைதியினை ஆடையென
உடுத்திக் கொண்டாள் !
பதவிகளில் புகழ்மழையில்
நானும் நனைய
பாசமிகு பெண்ணொருத்தி
மனைவி யானாள் !
வாழுகின்ற நாட்கலெல்லாம்
எனக்காய் வாழ்ந்த
வணங்கத்தகு தெய்வத்திற்கு
யாது செய்வேன் !
-யாதுமறியான்.