உயிர்ப் பிச்சை

தலைக்கவசம் அணியவில்லை
நிதானமாகவும் ஓட்டவில்லை வளைவில்
ஒரு சின்ன சறுக்கல்
சுமார் இருபது மீட்டர்
இழுத்துச் சென்றது
மற்றவை ஏதும் நினைவில் இல்லை
மறுநாள் காலை
மல்லிகைவாசம்
மெல்லிய கைகள்
எனை தட்டாமலேயே
தட்டி எழுப்பியது
ஒரு தாயின் அன்பு
தந்தையின் அரவணைப்பு கலந்த
அந்தத் தாதி எனை நலம் விசாரித்தாள்
மகிழ்ந்தேன்...
பிறகு தான் தெரிந்தது
இரத்ததானம் செய்து எனக்கு உயிர்ப் பிச்சை
போட்டவள் அவள்தான் என்று...
ஒருநொடி
இறந்துபோன என் தாயின் முகம்
என் கண்முன்னே தோன்றி மறைந்தது...

*✍🏿கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்*

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (29-Apr-25, 10:13 am)
Tanglish : uyirp pitchai
பார்வை : 53

மேலே